விண்ணை முட்டும் தீ!! 300 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறல்!! பயங்கர தீவிபத்து!!

 
தீ

திருப்பதி, ஆந்திர மாநிலம், கர்னூலில் இருந்து 306 கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்ட லாரி ஒன்று நள்ளிரவு 12 மணியளவில்பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவு பாடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி கர்னூல் -பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற இடத்தில் பயணித்த போது, லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென்று தீப்பொறி கிளம்பியது. இதை பார்த்த லாரி டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உயிர் பிழைக்க லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்களுக்கும் தீ மளமளவென பரவியது. 

இதனால் கியாஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் விண்ணை முட்டும் அளவிற்கு தீ பிழம்பு கிளம்பி அந்த வழியாக வந்த வாகன ஓட்டுகளை அதிர்ச்சியடைய செய்தது. இதை பார்த்த அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தியதுடன் இந்த கோர விபத்து குறித்து உளவு பாடு தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

300க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அந்த இடமே நெருப்புக்குளமாக மாறியது. இதனால்  தீயணைப்பு துறையினரால் லாரியின் அருகில் நெருங்க முடியாமல் போனது. இறுதியில் லாரி முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது. லாரியில் இருந்து வெடித்து சிதறிய கியாஸ் சிலிண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்தது. நள்ளிரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் நல்லவேளையாக சாலையில் வாகன ஓட்டிகள் யாரும் இல்லை. இதனால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்று அங்கிருந்த வாகன ஓட்டிகள் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

தீயணைப்பு துறையில் ரோபோக்கள்

இதைத்தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த கியாஸ் சிலிண்டர்களை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். இந்த பணிகள் நடந்ததால் அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து சில மணிநேரங்களுக்கு ஸ்தம்பித்தது. 300க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது குறித்து எண்ணெய் நிறுவனம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆந்திராவில் நள்ளிரவு நேரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web