இன்று பூமியை தாக்கும் சூரிய புயல்! தொலைத்தொடர்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு!

 
சூரிய புயல்

இன்று பூமியை வீரியமிக்க சூரிய புயல் தாக்குவதால், தொலைத்தொடர்புகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரியனிலிருந்து புறப்பட்டு வரும் மிக அதிக, வீரியமிக்க புயல் இன்று காலையிலேயே பூமியைத் தாக்க இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருந்த நிலையில், இதனால், பூமியில் தொலைத்தொடர்புகள் பாதிக்கப்படலாம் என்று கூறியுள்ளனர். 

சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி சூரிய புயல் உருவாகிறது. இந்த சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு வடிவத்தில் நெளிந்த நிலையில், பூமியை நேரடியாக தாக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர் தமிதா ஸ்கோவ் என்ற இயற்பியலாளர் கணித்துள்ளார். 

சூரிய புயல்

இந்த சூரிய புயல் தாக்கினால் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. செயற்கை கோள், ஜிபிஎஸ் சேவை, ரேடியோ சிக்னல் உள்ளிட்டவை பாதிக்கப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த சூரிய புயல் இன்று காலையிலேயே பூமியை தாக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரிய புயலை ஜி என்ற எழுத்தால் அளவிடப்படுகிறது. இதில் ஜி1 என்பது மிதமான புயல் என்பதும் ஜி5 மிகவும் ஆபத்தான சூரிய புயலாகவும் அளவிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கனடாவை சூரிய புயல் தாக்கிய நிலையில், இன்று நேரடியாக மிகப்பெரிய சூரிய புயல் தாக்கப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

சூரிய புயல்

1859-க்கும் 2022-ம் ஆண்டுக்கும் இடையே இது போன்ற பல சூரிய புயல்கள் பூமியை தாக்கியுள்ளன. ஆனால் அதன் தீவிரம் குறைவாகவே இருந்தது. இப்போது வரும் புயல் தீவிரம் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

பூமியின் வலி மண்டலம் அரணாக இருப்பதால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்பாடாது என்று சொல்லப்படுகிறது. அனால் அந்த கதிர்களின் வீரியம் அதிகமானால் புற்றுநோய் ஏற்பட காரணமாகலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கினறன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web