நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

 
ஸ்ரீவில்லிபுத்தூர்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆலயத் திருவிழாக்கள் மிக எளிமையாக நடத்தப்பட்டன. நடப்பாண்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து அனைத்து ஆலயங்களிலும் விமரிசையாக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடத்தின் எல்லா மாதமும் ஒவ்வொரு திருவிழா நடத்தப்படும். இதில் ஆடிப்பூர திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடத்தப்படும்.  

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர திருவிழாவை ஒட்டி சயன சேவை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில், ஆண்டாள் மடியில், ரங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்வில் பக்தர்கள் பரவசமடைந்தனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆலயத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெகமன்னாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும். மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்வர்.  

ஸ்ரீவில்லிபுத்தூர்

காலை 9.05 மணிக்கு தேர் திருவிழா தொடங்குகிறது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மான் ராஜ் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்தப்படுவதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள்,  அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போக்குவரத்துக்களை  மாற்றிவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக  கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web