தேங்கி நிற்கும் மழைநீர்! எகிறும் வெங்காயம் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
சின்ன வெங்காயம்

மழை... இல்லைன்னாலும் சிரமம்.. பெய்தாலும் சிரமம் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ விவசாயிகளின் வாழ்க்கைக்கு அப்பட்டமாக பொருந்துகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு மழை வரம். ஏரி, குளங்களில் வீடு வாங்கி குடிபுகுந்தவர்களுக்கு மழை சாபம். ஆனாலும், அவர்களது இயல்பு வாழ்க்கை அபார்ட்மெண்ட் இன்வெர்ட்டர், செல்போன் என்று வீட்டிற்குள் ரெண்டு மூணு நாட்களுக்கு முடங்கிப் போவதோடு முடிகிறது. ஆனால், விவசாயிகளின் பிரச்சனை வாழ்க்கையையே அசைத்து பார்கிறது.

தென்மாவட்டங்களில் பல விவசாயிகள் கதறுகிறார்கள். வாழைத் தோப்பு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெங்காயம், முள்ளங்கி, கோஸ், கேரட் போன்றவைகளைப் பயிரிட்டவர்கள் தேங்கி நிற்கும் நீரில், உள்ளே இவையெல்லாம் அழுகிக் கொண்டிருப்பதை நினைத்து, இவர்களும் கலங்கி நிற்கிறார்கள். தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த வாரத்தில் இருந்தே கனமழை நீடிக்கிறது. இந்த தொடர் மழையால் காய்கறித் தோட்டங்கள் மற்றும் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி, குளம் குட்டை போல காட்சியளிக்கின்றன. இப்படி தேங்கி நிற்கும் வெள்ள நீரில், பயிர்கள் அனைத்தும் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால், சந்தைக்கான வெங்காய வரத்து இப்போதே கணிசமாக குறைந்து விட்டது. 

தமிழகத்தில் அதிகளவு வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், நாமக்கல், அரியலுார், மதுரை பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து சந்தைக்கு விற்பனைக்கு வரும் வெங்காயத்தின் அளவு தற்போதே மிகக் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

வெங்காயம்

இதனால், சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. தீபாவளி வாரத்தில் கிலோ 45 முதல் 50 ரூபாய்க்குள் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை, நேற்று காலை கிலோ 100 ரூபாயை எட்டியது. திண்டுக்கல், மதுரை மொத்த வியாபார சந்தையில் முதல் தர சின்ன வெங்காயத்தின் விலை இது. அதே நேரத்தில், காய்ந்த வெங்காயம் மொத்த விற்பனை விலையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைக்கிறார்கள் இல்லத்தரசிகள்.

வெங்காயம் கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெல்லாரி வெங்காயம் விலை கொஞ்சம் உயர்ந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயத்தின் அளவை குறைத்துக் கொண்டு, பொதுமக்கள் பெரிய வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

இன்னும் 10 நாட்களுக்கு காய்கறி தட்டுப்பாடு இருக்கும்: மக்களே உஷார்..!!

சின்ன வெங்காயம் மீதான விலை உயர்வு, டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என்றும், தைப் பொங்கல் சீசனில் புதிய வெங்காயம் சந்தைக்கு வரும் போது தான் இனி விலை குறையும் வாய்ப்பு உள்ளது என்றும் வெங்காய மொத்த வியாபாரிகள் சற்றே ஆறுதல் தெரிவிக்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web