நகரசபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை!!

 
நகரசபை கூட்டம்

கிராமங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள், மேம்பாடு, செய்ய வேண்டிய பணிகள், குறைபாடுகள்  குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்வு கிராம சபை கூட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் நகரசபை கூட்டங்கள் நடத்தவும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், திட்டங்களை செயல்படுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் போல நகர பகுதி சபை கூட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. கிராமங்களை பொறுத்தவரை  ஊராட்சிகளில் இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். 

கிராம சபை கூட்டம்
தற்போது முதன் முறையாக கிராம மக்களை போல நகர் பகுதியில் உள்ள மக்களும் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் இந்த நகரசபை மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையிலும் நகர சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த நகர சபை கூட்டம் தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நடைபெற உள்ளது. சென்னை மட்டுமல்லாமல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஸ்டாலின்
அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின், தாம்பரம் மாநகராட்சி பம்மல் பகுதியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web