தமிழகத்தில் திருடப்பட்ட சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு!!!

 
சிலைகள்

உலக சந்தையில் ஆயுதம் மற்றும் போதை பொருளுக்கு அடுத்ததாக கலைநயம் மிக்க சிலைகளுக்கு அதிக மதிப்பு உள்ளது. இதனால், சிலை கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் இங்குள்ள சிலைகள் விலைபோவதால், குறுக்கு வழியில் பணம் ஈட்ட நினைப்பவர்கள் இத்தகைய சிலை கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதோடு, அதற்கு உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக புகழ்பெற்ற, மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ள கோவில்களிலேயே சிலை திருடுபோகும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 40 ஆண்டுகளுக்கு பிறகு காணாமல் போன சிலைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரையில் 10-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளனர்.

சிலைகள்

தற்போது  40 ஆண்டுகளுக்கு முன் பாலு என்பவர் விநாயகர் சிலை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில் தமிழக கோவில்களில் இருக்கும் 2 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, நாகை திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து திருடப்பட்ட தேவி, விநாயகர் ஆகிய இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

சிலைகள்

குறிப்பாக புகைப்படங்களை வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர். இந்த 2 சிலைகள் 1970 காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இரண்டு சிலைகளையும் மீட்கும் பணியில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அதே போல் இந்த கோயிலுக்கு சொந்தமான 11 சிலைகள் காணாமல் போனதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த வகையில் சோமாஸ்கந்தர், சந்திர சேகர அம்மன், தேவி, அஸ்திரதேவர், பிடாரி, அம்மன், நவக்கிரக சூர்யா உள்ளிட்ட 11 சிலைகள் திருடுப்போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web