சைக்கிள்களைத் திருடி உல்லாச வாழ்க்கை! கல்லூரி மாணவர்கள் கைது!

 
சைக்கிள் திருட்டு

விலை அதிகம் உள்ள சைக்கிள்களைத் திருடி, உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம், சிவசங்கர் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ் (48). இவர் சினிமா துறையில் கேமராக்களுக்கு லென்ஸ் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மகன் பயன்படுத்தி வந்த உயர்ரக சைக்கிள் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்ரக சைக்கிள் திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது மகனின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாகவும் அதனை மீட்டுத் தருமாறும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இ-சைக்கிள்

விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கடந்த 10 நாட்களில் சைக்கிள் திருடு போனதாக 4 புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் சம்பவ பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனைத்து இடங்களிலும் திருடியது ஒரே நபர்கள் தான் என்பது தெரியவந்தது.

விருகம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட உயர்ரக சைக்கிள்களை இவர்கள் இருவரும் இணைந்து திருடியுள்ளனர். அவற்றுள் சைக்கிளிங் செல்வதற்காக தங்களுக்கு என 2 விலை உயர்ந்த சைக்கிள்களை வைத்துக் கொண்டு மற்ற சைக்கிள்களை விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

சைக்கிள் பந்தய வீரர் ரப் வார்டெல்

இதையடுத்து இது தொடர்பாக இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து 5 விலை உயர்ந்த சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைத்தனர். உயர்ரக சைக்கிள்களை கல்லூரி மாணவர்கள் திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web