பலத்த எச்சரிக்கை! வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

 
புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

புதிய ஆபத்தாக வங்க  கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால், சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 11ம் தேதி முதல் பலத்த மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. 

சென்னையில் 36 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பெய்து சாலைகள் மற்றும் தெரு வீதிகளில் வெள்ளமாக ஓடியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. 

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!

இந்த நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.

மழை

கடலுக்கு மேலே 7.6 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். வரும் 12-ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web