சோகத்தில் மாணவர்கள்!! பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது!! அமைச்சர் திட்டவட்டம்!!

 
மாணவிகள்

தமிழகத்தில் நடப்பாண்டில் தொடக்கம் முதலே பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தமிழகம் மற்றும் புதுவையிலும் காய்ச்சல் பரவல் வேகமெடுத்து வருகிறது. இதில் புதுவையில் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 1044 பேர் இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போதைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடிய சூழல் கிடையாது. வழக்கம் போல் பள்ளிகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் செப்டம்பர் 18ம் தேதி  இன்று தமிழகம் முழுவதும் 50000 இடங்களில் 37வது தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில்  மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி

இந்நிலையில் அக்டோபர் முதல் தடுப்பூசி முகாம் புதன்கிழமைகளில்  நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 5.37 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது,

தடுப்பூசி

தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை.தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web