மாணவிகளை ஓட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை!! ஆசிரியரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
பாலியல் வன்கொடுமை

 

ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டம் ராவத் சர் ஹன்மங்கரில்  தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கௌதம் ஷர்மா என்ற உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளுக்கு வகுப்புகள் முடிந்த பின்னர் 2 மணி நேரம் ஸ்பெஷல் ஸ்கேட்டிங் கிளாஸ் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.

பாலியல் வன்கொடுமை

கௌதம் ஷர்மா, ஸ்பெஷல் கிளாஸ் என்று மாணவிகளிடம் பொய் சொல்லி வரவழைத்து அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளர். பின்னர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2 மணி நேரத்திற்கு மேலாகியும் மாணவிகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நேராக பள்ளிக்கு வந்து தேடியும் மாணவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஒரு வழியாக மாணவிகள் வீடு வந்து சேர்ந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

பெண் பாலியல் பலாத்காரம்

ஆசிரியர் தங்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றதை கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ஆசிரியர் கௌதம் ஷர்மா மீது ராவத்சர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆசிரியர் கௌதம் ஷர்மாவை போலீசார் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் அவர்களை சமாதானம் செய்து ஆசிரியர் கௌதம் ஷர்மாவை அதிரடியாக கைது செய்தனர். பள்ளிக்கு சென்ற மாணவிகளை ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் ஓட்டலுக்கு அழைத்து சென்ற ஆசிரியர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web