மாணவி பிரியாவின் திடீர் மரணம்! கல்லூரி மாணவிகள் மெளன அஞ்சலி!

 
ராணிமேரி கல்லூரி மாணவிகள்

மருத்துவர்களின் அலட்சியத்தாலும், தவறான சிகிச்சையினாலும் உயிரிழந்த கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியாவின் மரணம் ஒட்டுமொத்த அரசு மருத்துவமனையின் சிகிச்சை குறித்தே கேள்வி எழுப்புகிறது. இந்நிலையில், தங்களது கல்லூரி மாணவியின் திடீர் மரணத்துக்கு இன்று காலை ராணி மேரி கல்லூரி மாணவிகள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

ராணி மேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பட்டப்படிப்பு படித்து வந்த பிரியா சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்.  கால்பந்து வீராங்கனையான இவருக்கு, கடந்த மாதம் 20ம் தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரியா

அதன் காரணமாக வலியால் துடித்த அவர் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே கால் பெரிய அளவு வீங்கிப்போனது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதால், உடனடியாக அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது. 

இந்நிலையில் பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரியா
இந்நிலையில், உயிரிழந்த பிரியாவை இழந்து வாடும் ராணி மேரி கல்லூரியின் பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகம், சக மாணவிகள், தோழிகள் என அனைவரும் இன்று காலை மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web