டிபன் கடையில் திடீர் தீவிபத்து!! உணவை தூக்கி போட்டு தெறித்து ஓடிய வாடிக்கையாளர்கள்!!

 
தீவிபத்து

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியில் வசித்து வருபவர் ஜான். இவர் அதே பகுதியில் சிறிய அளவிலான சாலையோரமாக தள்ளுவண்டியில் டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.நேற்று தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த அடுப்பை உணவு தயார் செய்வதற்காக ஜான் பற்ற வைத்த போது திடீரென்று தீப்பற்றிக் கொண்டது.

தீவிபத்து

 தீ மளமளவென கடையின் முன் கட்டியிருந்த தார்பாயில் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அப்போது அவரது கடை முன்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜான் உடனடியாக குலசேகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். கடை இரும்பு தகரங்களால் அமைக்கப்பட்டிருந்ததால் சேதம் அதிகளவில் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், எரிவாயு கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. சாலையோர தள்ளுவண்டி கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web