ரன்வீர்சிங் நேரில் ஆஜராக சம்மன்!! பரபரக்கும் பாலிவுட்!!

 
ரன்வீர் சிங்

பிரபல நடிகருக்கு போலீசில் ஆஜராக சம்மன்! 


பாலிவுட் நடிகர் பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டை படத்துக்கு தனது நிர்வாண படங்களை அளித்து சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து வழக்கு விசாரணையில் ரன்வீர்சிங் வருகிற 22ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங், ‘லூட்டேரா’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’, ‘சிம்பா’, ‘கல்லி பாய்’, ‘83’ உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கும் நடிகை தீபிகா படுகோனுக்கும் இடையில் இருந்த காதல் கடந்த 2018ம் ஆண்டு  திருமணத்தில் முடிந்தது.

ரன்வீர் சிங் தீபிகா படுகோனே

வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும் என்று மிகவும் மெனக்கெடுபவர் ரன்வீர்சிங். இதற்காக தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பார். ஹேர் ஸ்டைல், டிரெசிங் என எப்போதும் மிகவும் டிரெண்டிங்காக இருப்பார்.இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்காக, ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட்டில் பங்கேற்றார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது

இந்தப் புகைப்படங்களின் மூலம் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங் மீது புகார் கொடுத்தது. பல்வேறு விமர்சனங்களைக் கடந்து தற்போது இந்த சர்ச்சையில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ரன்வீர் சிங்
அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வருகிற 16ம் தேதி அவர் இந்தியா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 16ம் தேதி ரன்வீர்சிங்கை நேரில் சந்தித்து சம்மனை கொடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது ஒரு பக்கம் இருக்க பீட்டா நிறுவனம் பிராணிகளின் நலனுக்காக மீண்டும் நிர்வாண போட்டோ ஷூட் நடத்தித் தரும்படி ரன்வீர்சிங்கை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web