இன்று செல்வத்தை சேர்க்கும் சூரியப் பிரதோஷம்!! விரதமுறை , பலன்கள்!!

 
பிரதோஷம்

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி, அமாவாசைக்கு பிறகு வரும் திரையோதசி திதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரதோஷம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம் வருகிறது.  இதனை சூரிய பிரதோஷம் என அழைக்கின்றனர். அனைத்து பிரதோஷங்களுமே சிறப்பு வாய்ந்தவை . சூரிய பிரதோஷம் கூடுதல் சிறப்பு கொண்டது. சூரிய பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடிப்பவருக்குச் சந்திர தோஷம் மற்றும் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், சர்ப்ப தோஷத்தைத் தணியும் என்பது ஐதிகம்.

 ஒருவன் தொடர்ந்து 11 பிரதோஷ நாளில்  வழிபாடு செய்தால் துன்பங்கள் கரைந்து  எண்ணிய காரியம் ஈடேறும். இன்று செய்யும்  சிவ வழிபாடு சூரியனின் அருளும், சிவ பெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.அத்துடன்  புகழ், பெருமை, மகிழ்ச்சி, அமைதி மற்றும் நீண்ட ஆயுளும் கூடும். ஜாதகத்தில் வரும் சூரிய தோஷம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.


பிரதோஷ மந்திரம்:


ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!


இன்றைய தினம் முழுவதுமே உடல் எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் மனம் ‘ஓம் நமசிவாய’ என்ற எளிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். இன்றைய தினம் விரதமிருந்து சிவனின் நினைப்பில் அவரின் நாமத்தை உச்சரித்து, மாலையில் சிவன் கோவில்களில் நடைபெறும் பிரதோஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு நந்தி பகவானையும், சிவபெருமானையும் வழிபடுவது மிகவும் சிறப்பு. ஜாதகத்தில் சூரியனின் நிலை வலுப்பெற்று நல்ல ஆரோக்கியமும் செல்வமும் உண்டாகும்.

சிவபெருமானுக்கு உகந்த நாள் பிரதோஷ நாள். பிரதோஷ வேளை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் நமது கர்மவினைகள் நீங்கவும், நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் வழிபாடு செய்திட மேன்மையான பலன்களை பெற முடியும்.

செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

அந்த வகையில் செவ்வாய் கிழமையான இந்த பிரதோஷ நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனே செவிசாய்க்கிறார் என்கின்றது சிவபுராணம். பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்திட வாழ்வின் இன்னல்கள் நீங்கி சுபிட்சங்களை பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.


இன்றைய தினத்தில் சிவபெருமானுடன் நந்தியையும் தரிசித்து வில்வம் , அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இயன்ற அளவு வயிற்றுப் பசியால் வாடுபவர்களுக்கு அன்னமிடலாம்.பொதுவாக எல்லா பிரதோஷங்களும் தனி சக்தி வாய்ந்தவை

செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

இந்த காலத்தில் தான் சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்றார். இந்த நேரத்தில் அவரின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் கண்டுக் களிப்பதாக ஐதிகம்.


பிரதோஷ வேளையான மாலை நேரத்தில் வீட்டில் இருந்த படியே ‘ஓம் நமச்சிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க இதுவரை முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று விடுவதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது. நம் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே நமது பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள்.அதிலும்  ஞாயிற்றுக்கிழமையான  இன்று அனுசரிக்கப்படும் பிரதோஷ வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பது ஐதீகம். பிரதோஷ நேரத்தில் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை மனமார தரிசித்து உளமாற பிரார்த்தனை செய்து கொண்டால் வாழ்வில் அனைத்து இன்னல்களும் நீங்கி மேன்மை பெறலாம். 


தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

From around the web