சூப்பர்!! திருப்பதிக்கு தினசரி சுற்றுலா!! திருச்சி, கோவை, மதுரை, சேலம் பக்தர்கள் பரவசம்!!

 
thirupathi


தமிழக அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் திருப்பதி சுற்றுலாவை தொடங்கியுள்ளது. அதாவது திருச்சி, மதுரை,சேலம் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது.  

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!
ஏற்கனவே சென்னையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை பொதுமக்களின் ஆதரவோடு மிக சிறப்பான  முறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்கி வருகின்றது. இந்த சுற்றுலாவை தமிழகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இருந்து தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி திருச்சி, மதுரை,சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகஸ்ட் 8-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.


இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இரண்டு வேளை சைவ உணவு மற்றும் குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி, சிறப்பு தரிசன பயண சீட்டு உட்பட கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 
அதன்படி 
திருச்சி, சேலத்திலிருந்து திருப்பதி சென்று வர  பெரியவர்களுக்கு ரூ 3300 
சிறியவர்களுக்கு ரூ 3000 
மதுரை :
பெரியவர்களுக்கு ரூ 4000 
சிறியவர்களுக்கு ரூ3700
கோயம்புத்தூர் 
பெரியவர்களுக்கு ரூ 4000 
சிறியவர்களுக்கு ரூ3700 கட்டணமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

இந்த சுற்றுலாவில் பயணம் செய்ய ஏழு நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சுற்றுலா குறித்த கூடுதல் தகவல்களுக்கு மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு – திருச்சி 0431-2414346, 9176995862 மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு – சேலம் 04281-22335, 223334, 9176995823 மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு – மதுரை 0452-2337471, 9176995822 மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு – கோயம்புத்தூர் 0422-2302176, 9176995852 என மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web