குட் நியூஸ்! ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு!

 
ஆசிரியர் தகுதி தேர்வு

நிஜமாகவே மகிழ்ச்சியான செய்தி தான். தமிழ அரசு பள்ளிகளில் இன்னும் நிரப்பப்பட வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீண்ட நாட்களாக பலரும் டெட் தேர்வுகள் முடிந்த நிலையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு படி ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கல்வியாண்டிலும் 2 முறை இந்த தேர்வை ஒவ்வொரு மாநில அரசும் நடத்த வேண்டும் என்பது மத்திய அரசு பிறப்பித்துள்ள சட்டம். அதன்படி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வு எனப்படும் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு

அதன்படி இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி வெளியானது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை கணினி வழியாக தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிட்டபடி தேர்வுகளை நடத்த முடியாமல் போனது.

இதனால் தற்போது தேர்வு தேதியில் 2வதாக முறையாக மாற்றம் செய்யப்பட்டு தாள்1க்கான தேர்வு இந்த மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. மீண்டும் இந்த தேர்வுகளை ஒத்தி வைத்து ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வி ளக்கம் அளித்தது.

குரூப் 1 தேர்வு

அதன்படி 3வது முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேர் முதல் தாள் எழுத விண்ணப்பித்துள்ளனர். அதே போல் 4 லட்சத்து 1 ஆயிரத்து 888 பேர் 2 வது தாள் எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆக மொத்தம் 6லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web