சூப்பர் ஆபர்!! சாக்லேட் சாப்பிட ரூ62 லட்சம் சம்பளம்!!
சாக்லேட் சாப்பிடாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் சாப்பிட ஆவல் காட்டுவார்கள். பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சி கொண்டாட்டங்களிலும் முதல் இடம் பிடிப்பது சாக்லேட் தான். அத்தனை சிறப்பு வாய்ந்த சாக்லேட்டை சாப்பிட ரூ.61 லட்சம் சம்பளம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா?
கனடா நாட்டைச் சேர்ந்த கேன்டி பன்ஹவுஸ் என்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் சாக்லேட்டுகளை ருசி பார்ப்பதற்கான ஆட்களை தேடி வருகின்றனர். இவர்கள் அறிவிப்பின்படி ஆணடுக்கு 1 லட்சம் டாலர் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில ரூ.61 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாகும்.
இந்த பணியில் மாதத்தில் 3,500 சாக்லேட்டுகளை ருசி பார்த்து தரவுகளை பதிவு செய்ய வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். குழந்தைகளின் பற்களில் கேவிட்டி பிரச்சினை ஏற்படும் என்ற பயம் வேண்டாம். ஏனென்றால் அதற்கு தகுந்த பல் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் வசதிகளும் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவிப்புகளை அள்ளி வீசி வருகிறது.
Hiring: CHIEF CANDY OFFICER! 🍭 Are you passionate about CANDY, POP CULTURE and FUN? Get paid 6 figures to lead our Candyologists. Job is open to ages 5+, you can even apply on behalf of your kid! #DreamJob #hiring #careers #candy pic.twitter.com/p9mmlPg5R6
— Candy Funhouse (@candyfunhouseca) July 19, 2022
இது குறித்து கேன்டி பன்ஹவுசின் சி.இ.ஓ. ஜமால் ஹெஜாஹி கூறும்போது, ‘‘எங்கள் நிறுவனத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வேலை பார்க்கலாம். சாக்லேட்டை ருசி பார்க்கும் தலைமை பண்பு கொண்டவர்களுக்கு இந்த வேலை மகிழ்ச்சியை அளிக்கும்’’ என்று கூறியுள்ளார். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 31ம் தேதி கடைசி நாள் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு தின்ன கூலியும் கிடைத்தால் வேண்டாம் என்பார்களா என்ன? ஆனால் அமெரிக்காவில் இருக்கும் குழந்தைகளுக்கே அதிர்ஷ்டம் வேறு என்ன சொல்ல?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?