சூப்பர் கண்டுபிடிப்பு!! பாலியல் சீண்டலில் இருந்து தப்பிக்க மின்சார காலணி!! பள்ளி மாணவி அசத்தல்!!

 
மின்சார காலணி

நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான உடல் ரீதியாக நடத்தப்படும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களில் இருந்த தப்பித்துச் செல்ல, பத்தாம் வகுப்பு மாணவியான விஜயலட்சுமி பிரதார் மின்சார காலணி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலக்ஷ்மி. இவர் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க மின்சார காலணி கண்டுபிடித்துள்ளார்.

மின்சார காலணி

பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி ஆகும். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றால் அதனை தடுக்க காலால் எட்டி உதைக்க அந்த நபர் மீது மின்சாரம் பாயும் மற்றும் இதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதால் லைவ் லொகேஷன் கணிக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மின்சார காலணி

ஆபத்தான நேரத்தில் காலணியில் உள்ள பொத்தானை அழுத்தினால், ஒலி எழுப்பும் வகையிலும் இந்த கருவியை மாணவி வடிவமைத்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்புக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

From around the web