ஆச்சரியம்!! கணவருக்கு 2 வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி

 
கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண். இவர் அனைவரையும் கவர்ந்த்  டிக் டாக்பிரபலம். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் இதே டிக் டாக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களின் பழக்கம் காதலாக மாறி ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து  இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவருமாக சேர்ந்து அல்வேறு வீடியோக்களை எடுத்து அதை தங்களது டிக்டாக் பக்கத்தில் போட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு ஏராளமான ஃபலோவர்ஸ் உண்டு.

ஊரார் கண்ணுப்படும் அளவிற்கு இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்து வந்த நிலையில் இவர்களது வாழ்விலும் சூறாவளி வீசியது. விமலாவை விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் சந்தித்து நானும்  கல்யாணும்  காதலித்ததாகவும், தற்போது சந்தர்ப சூழலால் அவரை பிரிந்து சென்றேன் அதன் பின்னர் எந்த தொடர்பும் இல்லாமல் போனதால் எங்களின் காதல் காணமல் போனதாக கூறி அழுதுள்ளார். மேலும் தன்னை கல்யாணிடன் சேர்த்துவைக்க  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதனால் செய்வது அறியாமல்  குழம்பிய விமலா இது குறித்து தனது காதல் கணவரிடம் விசாரித்தபோது தான் அந்த பெஐ காதலித்தது உண்மை என்றும் சில காரணங்களால்  தங்களின் காதல் முறிந்தது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  தமிழ் சினிமாவை தோற்கடிக்கும் நிகழ்வாக  தனது ஆசை காதல் கணவனை அவரது மனைவியே காதலனின் முதல் காதலை  தற்போது சேர்த்து வைத்துள்ளார். அதில் எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா செய்துள்ளார்.  விமலா தனது கணவர் கல்யாணுக்கு அவரது காதலி நித்யஸ்ரீயை இரண்டாவதாக  திருமணம் செய்து வைக்க தயாரானார். ஆனால் இப்போது மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதல் மனைவியே முன்னின்று கவனித்தது அங்கிருந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில்லுனு ஒரு காதல் படத்தை போன்று இங்கும் ஒருவர் தனது கணருக்கு வேரோறு திருமணம் செய்து வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web