குறிச்சிக்கோங்க!! அக்டோபர் முதல் புதன்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்!!
இன்று தமிழகம் முழுவதும் 50000 இடங்களில் 37வது தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அக்டோபர் முதல் தடுப்பூசி முகாம் புதன்கிழமைகளில் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 5.37 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது,
தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை.தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!