தமிழக அரசு கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் தேர்வு அறிவிப்பு!

 
ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழக அரசு கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்ப அரசு, வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை சரி செய்ய பள்ளிகல்வித்துறை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இதனையடுத்து முதல் கட்டமாக அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

ஆசிரியர் தேர்வு வாரியம்

அதனை தொடர்ந்து தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு டெட் தேர்வை கணினி வாயிலாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் சீனியர் விரிவுரையாளர் பணியிடத்தில் 24 பணியிடங்களும் ஜூனியர் விரிவுரையாளர் பணியிடத்தில் 49 பணியிடங்களும் நிரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதிச் சான்றை ஆயுள்கால சான்றாக மாற்றி அறிவிக்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

இப்பணியிடத்திற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், போன்ற பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எம்.இடி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும். 

மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 57-க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்‌ தேர்வு, நேர்முகத்‌ தேர்வு, சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு அடிப்படையில்‌ தகுதியானவர்கள்‌ தேர்வு செய்யப்படுவர்‌. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web