போக்சோவில் கைதான ஆசிரியர் பணி இடை நீக்கம்!! அதிரடி நடவடிக்கை!!

 
டேனியல்

புதுச்சேரி மரப்பாலம் அருகே 7-த் டே தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் மதகடிப்பட்டை சேர்ந்த டேனியல் வளவன் என்பவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலங்கியல் பாடம் எடுத்து வருகிறார். இவர், இப்பள்ளியில் பெற்றோரின்றி பாதுகாவலா் உதவியுடன் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, கடந்த ஒன்றை மாதமாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச பட இணைப்புகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

கைது

இதுகுறித்து அந்தச் சிறுமி தனது பாதுகாவலரிடம் தெரிவிக்கவே, அவா் சமூக அமைப்புகளிடம் தெரிவித்தாா். இதையறிந்த தமிழா் களம் நிா்வாகி அழகா், மாணவா் கூட்டமைப்பைச் சோ்ந்த சுவாமிநாதன், திராவிடா் விடுதலை கழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகளைச் சோ்ந்தோா் குறிப்பிட்ட தனியாா் பள்ளியின் முதல்வா் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த முதலியாா்பேட்டை போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதையடுத்து, போலீசாரின் பரிந்துரையின் பேரில், புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு அலுவலா் சிவசாமி தலைமையிலான குழுவினா், பாதிப்புக்குள்ளான பள்ளி மாணவியை நேரில் அழைத்து விசாரித்தனா். தொடா்ந்து, பள்ளியிலும் விசாரிக்க உள்ளனா். 

பணி இடை நீக்கம்

விசாரணைக்குப் பிறகு, போலீசாரிடம் முறைப்படி புகாரளித்து ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் நலக் குழுவினா் தெரிவித்திருந்த நிலையில், ஆசிரியர் டேனியல் வளவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web