அதிர்ச்சி!! தெலுங்கானா பா.ஜ.க தலைவர் தூக்கிட்டு தற்கொலை..!

தெலுங்கானா  பா..க  தலைவர்  தூக்கில்  தொங்கி  தற்கொலை  செய்து  கொண்ட  சம்பவம்  அரசியல் வட்டாரத்தில்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது.

 
பாஜக தலைவர் தற்கொலை

தெலுங்கானாவில் மியாபூர் நகரில் ஆல்வின் காலனியில் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என மியாபூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டனர். விசரணையில் இறந்தவர் தெலுங்கானா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வந்த ஞானேந்திர பிரசாத் என்பதும் இவர்  பிரசாத் சேர்லிங்கம்பள்ளி தலைவராகவும், பா.., மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர் ஞானேந்திர பிரசாத். இவர் கடந்த சில நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனது பென்ட்ஹவுஸில் வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்,  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரசாத் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது உதவியாளரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு தூங்க சென்றுள்ளார்.எனினும், நீண்ட நேரம் அவர் வெளியே வராத நிலையில், ஜன்னல் பகுதியை உடைத்து கொண்டு உதவியாளர் உள்ளே சென்றுள்ளார். பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி தகவல் அவருக்கு தெரிய வந்துள்ளது. பின்பு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

பின்னர் இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தெலுங்கானா  பா..க  தலைவர்  தூக்கில்  தொங்கி  தற்கொலை  செய்து  கொண்ட  சம்பவம்  அரசியல் வட்டாரத்தில்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது.

From around the web