பயங்கரம்!! பெற்ற மகள்களை தீ வைத்து எரித்த கொடூரத் தாய்.!

 
கர்நாடகா பெற்ற மகள்களை தீ வைத்து எரித்த தாய்

கணவன் கைவிட்டு சென்றதால் வாழ வழியின்றி தனது இரு மகள்களையும் பெற்ற தாயே தீ வைத்து எரித்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சேர்ந்தவர் ஜோதி. இவர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்குத்  திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் அவரை விட்டு சென்றுள்ளார்.

ஜோதி

கணவர் கைவிட்டதால் வாழ வழியின்ற திகைத்த ஜோதி தனது மகள்களை கொன்று தானும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஞ்சனாத்ரி மலைப்பகுதிக்கு ஜோதி சென்றுள்ளார். அங்கு தனது இரண்டு குழந்தைகள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதன் பின் ஜோதி, தலையில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது அவ்வழியதாக வந்தவர்கள், தடுத்து நிறுத்தியுள்ளனர். பெட்ரோல் வைத்து எரித்ததில் ஒரு குழந்தை உடல் கருகி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்கும், ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் கொடுத்தனர்.

ஜோதி

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதியை கைது செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பெற்ற மகள்களுக்கு தாயே தீ வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில்    சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web