பயங்கரம்!! தலையில் பைக் விழுந்து இளம் பட்டதாரி பெண் பலி!!
சென்னையில் திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டு மண்ணொளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 22 வயதான ஸ்ரீசதீஷ். இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். இவர் அம்பத்தூரை அடுத்த பாடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அதே வேப்பம்பட்டு சர்வ சக்தி நகரில் வசித்து வருபவர் 22 வயதான துர்கா லட்சுமி . இவர் பி.காம் பட்டதாரி. இவர், சென்னையில் தனியார் கால் சென்டரில் வேலை செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்னையிலிருந்து வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஸ்ரீசதீஷ், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரிக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது கனமழை கொட்டியது. இதனால் இன்னும் வேகத்தை அதிகப்படுத்திய ஸ்ரீசதீஷ், முன்னால் இருந்த ஆட்டோவை ஓவர்டேக் செய்ய திடீரென மோட்டார் சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்தினார். இதில் ஸ்ரீசதீஷ், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
பின்னால் உட்கார்ந்திருந்த துர்காலட்சுமி நிலைதடுமாறி கீழே விழுந்தார். நேரே அவரது தலையில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த துர்கா லட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீசதீஷ் படுகாயமடைந்தார். தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துர்கா லட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!