ஆட்டோ மீது அரசுப்பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து !! 2 பேர் பலி!! 2 பேர் கவலைக்கிடம்!!

 
விபத்து

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 5 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த பொன்முடி என்பவரின் மகன் மணிகண்டன் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொருவர் சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த ரவி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து

விபத்து குறித்து தகவல் கிடைத்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டோவில் பயணித்த மேலும் 3 பேரான வெஸ்ட் ஜாபர்கான் பேட்டை சபாபாதி (39), மனோகர் (38) மற்றும் ராஜீவ்காந்தி (30) ஆகிய 3 பேர மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து

உயிரிழந்த 2 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அரசு பேருந்து மற்றும் ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் 2பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web