தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து! 7 பேருக்கு மூச்சு தின்றல்!

 
தீ விபத்து

மதுரையில் 4 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து இன்று அதிகாலையில் ஏற்பட்டது. மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகே பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இதன், கீழ்தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓட்டலும், மேல் தளங்களில் தங்கும் அறைகளும் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் குபுகுபுவென தங்கும் விடுதி அறையி இருந்து கரும்புகை வர ஆரம்பித்தது. சில நிமிடங்களில் தீ பற்றி, மளமளவென எரிய ஆரம்பித்தது. தீ பரவி எரிய துவங்கியதும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த குளிர்சாதன பெட்டிகள் வெடித்து சிதறின. 

தீ விபத்து

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், 3 தளங்களைக் கொண்ட இந்த உணவகத்தில் சுமார் 20 அறைகள் உள்ளன. இங்கு தங்கியிருந்த அனைவரையும்  தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். 

தீ விபத்து

தீ விபத்தால் ஏற்பட்ட புகையில் அருகில் தங்கி இருந்தவர்களுக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்பது தெரிய வந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web