கேரளாவில் பயங்கரம்… சிறுமியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்...

 
மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இந்தியாவில் சமீப காலங்களாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது  போன்ற கொடூர சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அப்படிப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று தான் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் செய்தனர்.

பாலியல் வன்கொடுமை

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த சிறுமி  போதைக்கு அடிமையாகி இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர். அதில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு சிறுமியை வாலிபர் ஒருவர் சந்தித்து பேசியுள்ளார். அவர் சிறுமியை அருகில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்று சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து அவர் மயக்கத்தில் இருந்த போது   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை லாட்ஜ் உரிமையாளரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாலியல் தொல்லை

மறுநாள் அங்கிருந்து தப்பி வந்த சிறுமியை இன்னொரு நபர், வேலை தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இப்படி திருச்சூர், வயநாடு, பாலக்காடு உள்பட 4 மாவட்டங்களுக்கு அந்த சிறுமியை கடத்தி சென்று 3 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.  சிறுமி அளித்த வாக்கு மூலத்தில் பேரில் போலீசார்   21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர் ஜோசி தாமஸ், லாட்ஜ் உரிமையாளர் சாலாம், மானேஜர் அஜித்குமார், பூந்துறையை சேர்ந்த பெண் கிரிஜா உள்பட 8 பேரை போலிசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 13 பேரை   போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web