விறுவிறுப்பாக நடைபெற்ற "மிஸ் சென்னை திருநங்கை" 2022 போட்டி!!

 
மிஸ் சென்னை திருநங்கை

வரும் அக்டோபர் 15 ஆம் தேதி 'திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022'  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. அதில் ,  அக்டோபர் 13 ஆம் தேதி, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சி, அக்டோபர் 14 ஆம் தேதி திருநங்கைகளுக்கான உடலின மாற்றத்திற்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அதற்கான உதவிகள் குறித்த கருத்தரங்கம், அக்டோபர் 15ஆம் தேதி, திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியான "மிஸ் சென்னை திருநங்கை" அழகிப்போட்டிக்கான தேர்வு, சென்னை கீழ்ப்பாக்கம் டான்பாஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இதில் மொத்தமாக 22  திருநங்கைகள் கலந்துகொண்டு புகழ்பெற்ற பேஷன் கலைஞர்கள் முன்பு அணிவகுத்தனர். இதில் இருந்து 12 பேர், வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள "மிஸ் சென்னை திருநங்கை" இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மிஸ் சென்னை திருநங்கை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மூன்று திருநங்கைகளுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழும், மிஸ் சென்னை திருநங்கை பட்டமும் வழங்கப்படும்.திருநங்கைகளை அனைத்து துறைகளிலும் ஊக்குவிக்க அரசு தற்போது எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இண்ரு நடைபெற்ற மிஸ் சென்னை திருநங்கை அழகி போட்டியில் திருநங்கைகள் பல வண்ண ஆடைகளில் அணிவகுத்தது பலரையும்  வெகுவாக கவர்ந்தது.

From around the web