கிரிக்கெட் வீரரின் பற்களை பதம் பார்த்த பந்து!! வைரல் வீடியோ!!

 
இலங்கை வீர்ர் சமிக கருணாரத்ன

நம் அனைவருக்கும் விளையாட்டு என்பது பிடித்தமான ஒன்றே சிறு வயதில் விளையாடும் போது கீழே விழுவதும் காயங்கள் ஏற்படுவதும் பொதுவாக   தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கிரிக்கெட்டிலும், வீரர், வீராங்கனைகளுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்படுவதை பார்த்திருக்கிறோம்.

இலங்கை வீர்ர் சமிக கருணாரத்ன

ஆனால், இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவருக்கு வாய் மீது பந்து பட்டு பற்கள் சிதறியுள்ளது.  லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி பால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. போட்டியின் போது, இலங்கை வீரரான சமிக கருணாரத்ன, தனக்கு வந்த உயரமான கேட்சை பிடிக்க முற்பட்டார். அப்போது பந்து எதிர்பாராதவிதமாக அவரது பற்களை மீது பட்டுள்ளது.


 

இதில் அவரது வாயில் ரத்தம் வடிந்தது. மேலும் அவரது   நான்கு பற்களும் சிதறியது.   வாயை மூடியவாறு மைதானத்தை விட்டு வெளியே சென்ற அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.   கருணரத்னே தற்போது நலமுடன் உள்ள நிலையில், அவர் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

 

From around the web