கல்லணை கால்வாய் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு!!

 
கல்லணை ஒருவர் இறப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுசாலை ஊராட்சியில் கல்லணை கால்வாய் ஆற்றில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து நாட்டு சாலை கிராம நிர்வாக அலுவலர் இன்ப குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட இன்ப குமார் ஆண் சடலம் மிதப்பதை கண்டு இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

 பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் கால்வாயில் மிதந்து வந்த பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?  இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவர் யார் என்றும் இவர் எதர்க்காக இங்கு வந்தார் என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

From around the web