குடும்பத்தையே கொன்ற கொடூர தந்தை!! தானும் தூக்கிட்டு தற்கொலை!! பகீர் சம்பவம்!!

 
கொலையான மனைவி வள்ளி

குடும்பம் என்றால் சண்டைகள் சச்சரவுகள் பல இருக்கத்தான் செய்யும். அதற்காக தற்கொலை செய்துக் கொள்வது, கொலை செய்வது போன்ற விபரீத முடிவுகளை பலர் எடுத்து வருகின்றனர். அப்படி ஒரு கொடூர சம்பவம் தான்  திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலையில் மனைவி, மூன்று மகள்கள், மகனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தந்தையும்    தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

கொலை சம்பவம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள  காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி , இவர்களுக்கு த்ரிஷா என்ற 15 வயது மகளும், மோனிஷா என்ற 14 வயது மகளும் சிவசக்தி என்ற 6 வயது மகளும்,   தனுஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதனிடையே இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள்   அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

ஒருவர் பலி

அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனிடையே பழனி தனது குடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

From around the web