தொடரும் கொடூரம்!! மாடல் அழகி காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

 
போலீசார்

கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி செல்லப்பட்டு  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நடிகையை பலாத்காரம் செய்ததாக கூலிப்படையினருடன்  நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும்  நிலையில் கொச்சியில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.  காசர்கோடு பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண்  மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

பாலியல் வன்கொடுமை

சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது அந்த மாடல் அழகி, உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியில் வசித்து வரும் மாடலிங் பெண்ணுக்கு  ராஜஸ்தான் பெண் மாடல் அழகி கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்து சென்றார். அந்த பார்ட்டியில் ராஜஸ்தான் பெண்ணின் 3 ஆண் நண்பர்களும் அந்த பார்ட்டிக்கு வந்திருந்தனர். மாடல் அழகி தோழிக்கும் அந்த 3 நண்பர்களும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் தான். அனைவரும் சேர்ந்து மது அருந்தி ஆட்டம் போட்டனர்.

ஒரு கட்டத்தில்  மாடல் அழகி மயக்க நிலைக்கு சென்றுவிட்டார்.  அவரை வீட்டில் கொண்டுவிடுவதாக சொல்லி, அனைவரும் முன்வந்துள்ளனர். 3 இளைஞர்களும், ஒரு வாகனத்தில் அழகியை ஏற்றிக்கொண்டு சென்றனர்.இதில்  ராஜஸ்தான்  மாடலிங் பெண், அவர்களுடன் செல்லாமல் அங்கேயே தங்கி விட்டார்.  காரில் 3 பேரும் கொச்சி நகரில் பல இடங்களில், விடிய விடிய சுற்றிக் கொண்டே ஓடும் காரிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர்  அதே வாகனத்தில்  மாடல் அழகியை ஏற்றிக்கொண்டு அவரது வீட்டு அருகே விட்டு விட்டு சென்றனர்.

போலீஸ்

மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகத்தின் பேரில் , அக்கம்பக்கத்தினர்  பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தற்போது மாடல் அழகியை மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாடல் அழகியை கடத்தி சென்ற காரை கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.அதே நேரத்தில்  மாடல் அழகியின் 3 நண்பர்கள், அவர்களிடம் கோர்த்து விட்ட  அவரது தோழி  4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web