மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்த கொடூரம்!! விடுதி காப்பாளரின் கேவலமான செயல்!!
பணத்தை திருடியதாக கூறி 5 ஆம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சிறுமி ஒருவர் 5-ம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் அந்த பள்ளியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.
இந்நிலையில், விடுதில் மற்றொரு மாணவி வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை 5-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விடுதியின் பெண் காப்பாளர், சரியாக விசாரிக்காமல் மாணவியின் முகத்தில் கருப்பு நிற வண்ணம் பூசி , மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளார்.
இதனிடையே சிறுமியின் தந்தை மகளை சந்திக்க விடுதிக்கு சென்றபோது தனக்கு நடந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.