ஆற்றுப்பாலத்தில் கவிழ்ந்த பேருந்து!! 12 பேர் பலி!!
மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து மகாராஷ்டிரத்தின் புனே நகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 55 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த பேருந்து மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் கால்கட் சஞ்சய் சேது பகுதியில் பாலத்தின் மீது சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 15 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தம்னாட் மற்றும் கல்டகா போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படுகாயமடைந்தவர்கள் 2 பேர் மத்திய பிரதேசத்தின் தம்னாட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?