தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து!! 17 பேர் படுகாயம்.!
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பேரும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திருமண விழாவில் பங்கேற்க சென்ற 17 பேர் காயமடைந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜாரி என்ற இடத்தில் நடைப்பெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக 15க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பேருந்து தர்குண்டி எல்ஓசி சாலையில் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் இருந்த 17 பேர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஜிஎம்சி ரஜோரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 17 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த விபத்து குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.