அந்தரத்தில் பறந்து தலைகுப்புற கவிழ்ந்த கார்! அ.தி.மு.க பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி!

 
கார் விபத்து

சென்னை பைபாஸ் சாலையில், வண்டலூரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையில் அதிவேகமாக வந்த கார் கவிழ்ந்து அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிழிந்துள்ளனர்.

சென்னை பைபாஸில் கோர விபத்து! அ.தி.மு.க பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி!

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் அதிமுகவில் உள்ளனர். தொழிலதிபர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தைப் பழுது பார்த்து விட்டு, வண்டலூரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளி வட்ட சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

காரில் இவர்கள் இருவருடன் சேர்த்து 5 பேர் பயணம் செய்தனர். திடீரென கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்ததால், சாலையில் இருக்கும் இரும்பு தடுப்பு சுவர்களில் மோதி, பள்ளத்தினுள் தலைக்குப்புற கவிழ்தது. இந்த கார் விபத்தில் சகோதர்கள் இருவரும், அவர்களுடன் வந்த சுதாகர் என்பவரும் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web