1,100யை தாண்டிய பலி எண்ணிக்கை! பாகிஸ்தானில் தொடரும் கனமழை!
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது.
கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 1,061 போ் உயிரிழந்துள்ளனா்; 1,575 போ் காயமடைந்துள்ளனா். 9,92,871 வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, லட்சக்கணக்கானவா்கள் தங்குமிடம், உணவு, குடிநீா் இல்லாமல் தவித்து வருகின்றனா். இந்த கனமழைக்கு 7,19,558 கால்நடைகள் பலியாகியுள்ளன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!