ப்ரியா மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் தலைமறைவு!! பரபரக்கும் தலைநகர்!!

 
மருத்துவர்

சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் ரவிக்குமார் மகள் 17 வயது பிரியா. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்திருந்தார். ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டே  கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

ப்ரியா

மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் பிரியாவுக்கு காலில் வலி மட்டும் குறையவே இல்லை . இதனால் மறுபடியும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று செய்த பரிசோதனையில் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற விட மருத்துவர்கள் வலியுறுத்தினர். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர். இதனை தொடர்ந்து கால்பந்து வீராங்கனையின் கால்களை மருத்துவர்கள் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம் எனக்கூறி பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ப்ரியா

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த செய்திக்குறிப்பில்  தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் எனவும், அதன்பிறகு அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்திருந்தார். அவரின்  உத்தரவுப்படி  மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் அத்துடன் ரூ10 லட்சம் நிவாரணத் தொகை அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web