பணிபுரியும் இடத்தில் சிலைகளை திருடிய ஊழியர்!! கையும் , களவுமாக பிடிபட்ட அவலம்!!

 
வெண்கல சிலை

உலோக சிலைகள் விற்பனை கடை ஊழியர், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சிலைகளை திருடி மாட்டிக் கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.சென்னை மயிலாப்பூர் நார்த்மாடா தெருவில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் அதே பகுதியில் பிஎல்டி என்கிற உலோக சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை கடை ஒன்றை நடத்தி வரகிறார். இவரது கடையில் சண்முகம் (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்.

போலீஸ்

தியாகராஜனின் கடையில் அதிகளவிலான கண்கவர் சிலைகள் விற்பனைக்கு அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். அதில் இருந்து சுமார் 6 கிலோ எடை கொண்ட வெண்கலம் மற்றும் பித்தளை சிகைள் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் தியாகராஜனுக்கு சண்முகத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் தங்கிருக்கும் அறைக்கு சென்று திடீரென்று சோதனை மேற்கொண்டார்.

இளம் நடிகர் கைது

அப்போது காணாமல் போன சிலைகள் சண்முகத்தின் அறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சண்முகத்தை மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சண்முகத்திடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 9 வெண்கல சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஊர்விட்டு ஊர்வந்து வேலை பார்த்த கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சிலைகளை திருடிய ஊழியரால் அப்பகுதி வியாபாரிகள் இடையே பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web