பிரபல திரை விமர்சகர் திடீர் மரணம்! தனுஷ், கீர்த்தி சுரேஷ் இரங்கல்!

 
கெளசிக்

பிரபல இளம் திரை விமர்சகர் கெளசிக், நேற்று மதியம் மாரடைப்பு காரணமாக திடீரென்று மரணடைந்ததால் திரை உலகினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த விமர்சகர் மற்றும் தொகுப்பாளரான கௌசிக் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ் சினிமாவின் விமர்சகராகவும் தொகுப்பாளராகவும் இருந்து வந்தவர் கௌசிக். இவருக்கு வயது 35. பொறியியல் படித்துள்ள கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல தனியார் ஊடகங்களில் பணியாற்றி வந்தார்.

அதன் பின்னர் தமிழ் சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா விமர்சகராகவும், சினிமா டிராக்கராகவும் தனது பணியை தொடங்கினார். இதன் விளைவாக பல்வேறு திரைபிரபலங்களின் கவனத்தை கௌசிக் தன் பக்கர் ஈர்த்தார். மேலும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிட்டு எப்போதும் ஆக்டிவாக இருந்தார்.



நேற்று, திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கௌசிக் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளை கௌசிக் முடித்து வைத்திருந்தார். ஆனால் கௌசிக் சரியான நேரத்திற்கு வராததால் அவரது நண்பர்கள் சந்தேகம் முடைந்தனர். இதனால் போனில் கெளிசிக்கை தொடர்பு கொண்ட போது அவர் எந்த பதிலும் தரவில்லை. கௌசிக் நேற்ற மதியம் படுக்கையில் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி நண்பர்களுக்கு கிடைத்துள்ளது. கௌசிக்கின் திடீர் மரணம் ஊடக துறையிலும் மட்டுமல்லாமல் சினிமாத் துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இவரது மறைவுக்கு ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் ஹைதாரி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பல்வேறு திரைபிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது இரங்கலை சமூக ஊடங்களில் அவரது நினைவுகளுடன் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web