மனைவி எதிரே கணவணை வெட்டி சாய்த்த கும்பல்!! சென்னையில் பரபரப்பு!!

 
கணவர்

சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் 3-வது தெருவில் வசித்து வந்தவர் ராஜா(49). ஆட்டோ ஓட்டுனரான இவர், பாரதி சாலயில் உள்ள விக்டோரியா மருத்துவமனை அருகே சொந்தமாக டிபன் கடை நடத்தி வந்தார். இவர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை

இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் தனது டிபன் கடைக்கு அருகே ராஜா நின்று கொண்டிருந்த போது திடீரென முககவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து போன ராஜா, ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைக் கண்ட அவரது மனைவி ராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அவரை அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜாம்பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாண குமார், கொலையை நேரில் பார்த்தவர்களிடமும், ராஜாவின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். டிபன் கடை நடத்திய இடத்தில், ராஜாவுக்கும் சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வடமாநிலத்தவர் கொலை

மேலும் ஏற்கனவே ராஜா மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம், ஜாம்பஜார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web