சிறுவனை அடித்தே கொன்ற கும்பல்! பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்ததால் சோகம்!

 
பிட் பேப்பர்

தேர்வு நேரத்தில் பிட் பேப்பரைக் காதல் கடிதம் என நினைத்து, சிறுவனை கும்பல் அடித்தே கொன்ற கொடூரம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிறுவன் தயா குமார் (12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தயா குமாரியின் சகோதரி அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது சகோதரி அரையாண்டு தேர்வு எழுதிய நிலையில், சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி உதவ தயா குமாரும் பள்ளிக்கு சென்றுள்ளார். 

அப்போது தேர்வு அறைக்கு வெளியே இருந்து தயா குமார் பிட் பேப்பரை தூக்கி வீசி சகோதரிக்கு உதவி செய்தபோது ஒரு பிட் பேப்பர் தவறுதலாக வேறு ஒரு மாணவிக்கு அருகே சென்று விழுந்துள்ளது. அந்த மாணவி தனக்கு தயா குமார் லவ் லெட்டர் கொடுத்துள்ளதாக தவறாக புரிந்து கொண்டுள்ளார். 

க்ரைம் ஊர்மக்கள்  கும்பல்

இதையடுத்து அந்த மாணவி அதேபள்ளியில் படிக்கும் தனது சகோதரரிடம் இதுகுறித்து கூற, சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வந்து தயா குமாரை தூக்கி சென்று சரமாரியாக அடிக்கத் தொடங்கினர். சிறுவனை அடித்தே கொன்ற கும்பல் சிறுவனின் உடலை சிதைத்து ரயில்வே டிராக் பக்கம் வீசி சென்றது.

வெகு நேரமாகியும் தயா குமார் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தயா குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், நான்கு நாட்கள் கழித்து தான் சிறுவனின் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். 

தேர்வு

பின்னர் விசாரணையில் உண்மை அம்பலமான நிலையில், மாணவியின் அண்ணன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரும் சிறார் என்பதால் சிறார் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web