பகீர்!! 15 வயது சிறுவனுடன் ஓடிப்போன 4 குழந்தைகளின் தாய்!!
இந்தியாவில் சிறுவர்களும், சிறுமியர்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் , பாலியல் வன்புணர்வுகளுக்கும் ஆளக்கப்பட்டு வருவது தொடர்கதியாக உள்ளது . இதேபோல் ஆந்திரா மாநிலம், அருகே ஒரு சிறுவன் பெண் ஒருவரால் சீரழிக்கப்படுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் குடிவாடா என்ற பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா. இவருக்கு இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதமாக கணவனை பிரிந்து தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் வசிக்கும் எதிர் வீட்டில் இருக்கும் 8ம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்கு டி.வி பார்க்க செல்லும் மாணவனுக்கு ஸ்வப்னா தனது செல்போனில் தவறான படங்களை காண்பித்து சிறுவனை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர், அளித்த புகாரின் பேரில் ஸ்வப்னாவின் செல்போன் எண்ணை வைத்து ஐதராபாத்தில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்வப்னாவை போக்ஸோ வழக்கில் கைது செய்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்