11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் !! பள்ளிகளில் தொடரும் அவலங்கள்!!

 
பாலியல் வன்கொடுமை


11ம் வகுப்பு மாணவியிடம் ஆதார் கார்டை எடுத்து வரச் சொன்ன பள்ளி தலைமை ஆசிரியர் விடுமுறை நாளில் பள்ளியில் வைத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர், ஊழியர்கள் என மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பயந்து சில மாணவிகள் ஊமையாகிவிடும் சூழ்நிலையில், சில மாணவிகள் மட்டும் தங்களுக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோர்களிடம் தைரியமாக சொல்கிறார்கள். 

பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேசம் மாநிலம் அமேதியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.சம்பவத்தன்று ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். எனவே உன்னுடைய ஆதார் கார்டை பள்ளிக்கு கொண்டு வா என்று பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியை பள்ளிக்கு வரசொல்லி இருக்கிறார். அவர் வரசொன்ன தினம் பள்ளிக்கு விடுமுறை. எனவே பள்ளியில் யாரும் இல்லாததால் அங்கு வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இது குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர்.

இளம் நடிகர் கைது

பிரபலமான தனியார் பள்ளியில் பிளஸ்1 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த முசாபிர்கானா போலீசார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web