மனைவியை நிர்வாணமாக பூஜையில் உட்காரச் சொன்ன கணவர்! வெளியானது அடுத்த அதிர்ச்சி!
கேரளாவையே அதிர வைத்த நரபலி பூஜை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், கேரளாவில் இன்னொரு பூகம்பம் வெளியானது. பேய் பிடித்திருப்பதாகவும், நிர்வாண பூஜை செய்தால் பேய் ஓடி விடும் என்றும் மந்திரவாதி சொன்னதைக் கேட்டு, மனைவியை நிர்வாண பூஜைக்கு கணவனே கட்டாயப்படுத்தியது அதிர செய்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், தனது கணவரும், மாமியாரும் சேர்ந்து கொண்டு தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் .
கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலு சத்திய சுபாபு. 36 வயதான இவருக்கு கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சத்தியபாபு தன் மனைவி பற்றி ஒரு மந்திரவாதியிடம் ஜோதிடம் பார்த்து இருக்கிறார். அப்போது அவர், சத்தியபாபு மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், நிர்வாண பூஜை செய்தால் அந்த பேய் ஓடிவிடும் என்று சொல்லி இருக்கிறார்.
இதை கேட்ட சத்திய பாபு தன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிர்வாண பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மனைவியின் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து விட்டு நிர்வாணமாக வந்து பூஜையில் உட்காருமாறு மந்திரவாதியும், கணவனும் சொல்ல, அதற்கு மாமியாரும் சேர்ந்து கொண்டு வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இதன் பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். அதன் பின்னர் விவகாரத்து கேட்டு அந்த பெண் கணவர் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தற்போது கேரளாவில் நரபலி விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த பெண் சடையமங்கலம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த பெண்ணின் புகாரின் பேரில் கணவர், மாமியார், போலி மந்திரவாதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் பின்னர் சடையமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட 4 பேரையும் பிடிக்க சென்ற போது, தலைமறைவாகி விட்டார்கள். போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!