மனைவி மீது தீ வைத்து , தானும் தீக்குளித்த கணவன்!! பராமரிக்க யாரும் இல்லாததால் பரிதாபம்!!

 
பத்மாவதி

சென்னை அயனாவரம் தாகூர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் 75 வயதான கருணாகரன். இவர் மனைவி 65 வயது பத்மாவதி . கருணாகரன் ஐ.சி.எப்.ல் கார்பெண்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் . 4 பேரும் திருமணம் ஆகி  பிள்ளை, குட்டிகளுடன் தனித்தனியாக வேறுவேறு பகுதிகளில் வசித்து வந்தனர். பெற்றோரை பராமரிக்க யாரும் முன்வரவில்லை. 

தீவிபத்து

இதில் சில காலமாக மனைவி பத்மாவதி மன அழுத்தம் காரணமாக மனநோயாளி ஆகிவிட்டார். அவரை கருணாகரன் தான் பராமரித்து வந்தார். அவருக்கு வயதானதால் மனைவியை சரிவர பராமரிக்க முடியவில்லை. இதனால் அவர் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். யாருக்கும் சிரமம் அளிக்க வேண்டாம் நமது கடமை முடிந்து விட்டது.இதனால் நமது முடிவை நாமே தேடிக் கொள்வோம் என முடிவெடுத்தார். இதன் படி  நேற்று முன்தினம் இரவு கருணாகரன் தன்மீதும் பத்மாவதி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் உடனடியாக அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ்

விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 பேரும் உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 பேரையும் சிகிச்சைக்காக சேர்த்ததில் நேற்று மதியம் பத்மாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கருணாகரன் அதிக தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை தீவி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web