கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கணவன்! மீட்டு மருத்துவமனையில் சேர்த்த மனைவி!

 
காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

திருமணமாகி மனைவி இருக்கையில், திருமண பந்ததையும் மீறிய உறவில் இருந்த கணவனும், கள்ளக்காதலியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் மனைவி சேர்த்த விவகாரம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே, கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் தர்மராஜ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி தமிழரசி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில் 20 வயதான இளம்பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது.

காதல்

கடந்த ஓராண்டிற்கு முன்பு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வெல்லமண்டியில் தர்மராஜூம் அந்த இளம் பெண்ணும் ஒன்றாக வேலைப் பார்த்து வந்தனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இவர்களது கள்ளக் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததில் பூதாகரமாக வெடித்தது. அதைத் தொடர்ந்து தர்மராஜூம், இளம்பெண்ணும் பேசக்கூடாது என்று கூறி இருதரப்பினரும் அவர்களைப் பிரித்து வைத்தனர்.

இதைத தொடர்ந்து மனைவி தமிழரசிக்கு தர்மராஜ் போன் செய்து ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறினார். அதில் தான் தனது காதலியுடன் ஏற்காடு ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் இருப்பதாகவும், விஷம் குடித்து விட்டதாகவும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி சம்பவ இடத்திற்கு உறவினர்களுடன் விரைந்து சென்றார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த தர்மராஜையும், உடன் விஷமருந்தி மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

விஷம்
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தர்மராஜ், இளம்பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது குறித்து உறவினர்கள் கண்டித்ததும், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரையும் பிரித்து வைத்ததையும் விசாரணையில் அறிந்தனர். இருப்பினும் 2 பேரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் விஷம் குடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web