மனைவியை கொடூரமாக தாக்கி செல்ஃபி வீடியோ எடுத்த காதல் கணவன்! குடிச்சாலும் நியாயத்தைச் சொல்வேன்!

 
திலீப்

மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால், கொடூரமாக தாக்கி, மனைவியுடன் செல்ஃபி எடுத்த சைக்கோ கணவன், அதை வீடியோவாக பதிவு செய்து விட்டு, குடி போதையில் இருந்தாலும் நான் நியாயமானதைத் தான் செய்கிறேன் என்று கூறுவது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மலையன்கீவு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (27). இவரது மனைவி ஆதிரா (24). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திலீப்பும், ஆதிராவும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் உறவினர் இன்றி தனியே வசித்து வந்துள்ளனர். 

மது போதைக்கு அடிமையான கணவர் திலீப் குடும்பத்தை சரிவர கவனிப்பது இல்லை. இதனால் குடும்பத்தில் கடன் அதிகரிக்கவே, கடன் சுமையை தீர்க்கவும் குழந்தைகளை வளர்க்கவும் மனைவி ஆதிரா அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார். தன் மனைவி வேலைக்கு சென்று சம்பாதிப்பது கணவர் திலீப்பிற்கு பிடிக்கவில்லை.

திலீப்

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த திலீப், கடும் கோபத்துடன் மனைவியை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.  இதன் காரணமாக ஆதிராவின் முகத்தில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் நிற்காமல் வலி தாங்காமல் துடித்து அழும் மனைவியுடன் செல்ஃபி வீடியோ எடுத்த கணவர், நான் போதையில் இருந்தாலும் நியாயமான காரியத்தை தான் செய்கிறேன் என்றார்.

க்ரைம்

அந்த வீடியோவில் அழுத குரலில் பேசும் மனைவி ஆதிரா, “என் கணவர் சம்பாதித்து பணம் தந்து கடனை அடைத்தால் நான் வேலையை விட்டு விட்டு வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன். நான் வேலைக்கு செல்லவில்லை என்றால் குழந்தைகள் பட்டினி தான் கிடப்பார்கள்” என்று தழுதழுக்க பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், திலீப் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க

From around the web