மனைவியை நீர்வீழ்ச்சியில் தள்ளி கொலை செய்த காதல் கணவன்!! திருமணமாகி 4 மாதத்தில் பரிதாபம்!!

 
தமிழ்ச்செல்வி

காதல் மனைவியை நீர்வீழ்ச்சியில் தள்ளி கணவன் கொடூரமாக செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தவர் தமிழ்ச்செல்வி. 19 வயதான இவரும், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் 8-வது தெருவை சேர்ந்த மதன் என்ற 22 வயது வாலிபரும் ஒருவரையருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணத்தில் முடிந்தது.

உடல்

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதியில் இருந்து புதுப்பெண்ணான தமிழ்ச்செல்வி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல்கீஸ் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி காணாமல் போன தனது மகள் தமிழ்செல்வியை  கண்டுபிடித்து தரும்படி ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடியாக இந்த வழக்கில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது. தமிழ்ச்செல்வியின் கணவர் மதன் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை படிந்தது. அதைத்தொடர்ந்து மதனை பிடித்து விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

கணவன், மனைவி இருவரும் கல்யாண புதிதில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். சென்ற இடத்தில் திடீரென்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மதன், தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து வந்துவிட்டார் என்று தெரிவித்தார்.மதன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செங்குன்றம் போலீசார், கோனே நீர்வீழ்ச்சிக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சித்தூர் போலீசார் உதவியுடன் தமிழ்ச்செல்வியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நீர்வீழ்ச்சி
ஆந்திர போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், நேற்று கோனே நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஒரு புதரில் தமிழ்ச்செல்வியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகிய நிலையில் தமிழ்ச்செல்வியின் உடல் எலும்புக்கூடாக கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. காதல் கணவர் மதனை போலீசார் அதிரடியாக கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web